இலவச டிக்கெட் வாங்க வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : திருப்பதி மலையில் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதம்!!

திருப்பதி : இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது மற்றும் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம் நடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம் மாதம் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று திருப்பதி உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு வழங்க முடிக்கப்பட்டன.

இந்த நிலையில் திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் நேற்று மூடப்பட்டன. இந்த நிலையில் கவுண்டர்கள் மூடப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் இன்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வாங்குவதற்காக திருப்பதிக்கு வந்தனர்.

கவுண்டர்கள் மூடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் கோவில் முன் நின்று மானசீகமாக இறை வழிபாடு நடத்தி ஊர் திரும்பலாம் என்று அவர்களில் பலர் முடிவு செய்தனர்.

எனவே அவர்கள் திருப்பதி மலைக்கு செல்ல புறப்பட்டனர். ஆனால் மலையடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் டிக்கெட் இல்லாதவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் நாளை பதினோராம் தேதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல வேண்டும்.

12ஆம் தேதி சாமி கும்பிடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நாளை காலை முதல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையடிவாரத்தில் சாலையில் நின்றவாறு அங்கிருந்து செல்ல இயலாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் நாங்கள் உங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இன்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மற்றும் 12ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பார்ட்டி வைத்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரவி மோகன் – கெனிஷா… திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…

49 minutes ago

என் கதையில இருந்து உருவிட்டாங்க? காப்பிரைட் வழக்கில் சிக்கிய நானியின் ஹிட் 3!

ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…

58 minutes ago

விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…

1 hour ago

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

16 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

17 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

17 hours ago

This website uses cookies.