குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகே கைவிட்டு சென்றுவிட்டார்.
அந்த குழந்தையை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இந்த சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியதுடன் இதுபற்றி போலீஸ்க்கு தகவல் அளித்தனர்.
தெலுங்கானா மாநிலம் காசிகுடாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையை தாய் கைவிட்டு சென்றது பற்றிய தகவல் அறிந்த காசிகுடா ஆய்வாளர் சாய்குமார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.
அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே திறந்த வெளியில் கிடந்த அந்த குழந்தையை பார்த்த காவல் ஆய்வாளர் சாய்குமார் உடனடியாக குழந்தையை கையில் ஏந்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றார்.
அவருக்கு அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண்களும் உதவி செய்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் குழந்தை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காவல் ஆய்வாளர் சாய்குமார் செயலை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.