முதல்ல இந்தியை கத்துக்கிட்டு வாங்க… முதலமைச்சர் ஸ்டாலின் மீது நிதிஷ்குமார் ஆவேசம் : இண்டியா கூட்டணிக்குள் பிளவு?!!
டெல்லியில் நேற்று “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார்.
அப்போது டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும் என்றனர்.
இதையடுத்து மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார். ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போனபோதே அவர்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது என ஆவேசப்பட்டிருக்கிறார்.
அத்துடன் தமது கட்சியின் மனோஜ் ஜா, தமது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தையும் உடனே நிறுத்துமாறும் நிதிஷ்குமார் கோபத்துடன் கூறினாராம். இது “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முந்தைய “இந்தியா” கூட்டணியின் 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் இந்தி மொழி பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதனடிப்படையில்தான் இம்முறையும் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் “இந்தியா” கூட்டணி மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ்குமார் தமது கோபத்தை நேற்று திமுக தலைவர்கள் மீது வெளிப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.