அக்கா திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமகனை கட்டிக் கொண்ட தங்கை : ‘நினைத்தேன் வந்தாய்’ பட பாணியில் நடந்த சம்பவம்!!

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் என்பவர் தான் மணமகன்.

அடுத்த திருமணம் நடைபெறும் நாளன்று மணமேடைக்கு வந்த மணமகனும் மணமகளும் மாலையை மாற்றிக்கொண்டனர். உறவினர்கள் கூடியிருந்த நேரத்தில் தாலி கட்ட வேண்டிய சம்பிரதாயம் நடந்தது.

அப்போது மண்டபத்தின் மாடியில் ஏறி நின்ற மணப்பெண்ணின் தங்கை, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவர் ரகளையில் ஈடுபட, திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த பெண்ணிடம் பெற்றோர் பேசி பார்த்தனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.

போலீசார், உள்ளூர் தலைவர் மற்றும் மணமகனிடம் பேசினர், அப்போது தான் மணமகன் ராஜேஷ் சொன்ன தகவல் அங்குள்ளவர்களை தூக்கி வாரிப்போட்டது.

சாப்ராவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே மணமகளின் தங்கை புதுலுடன் காதல் வயப்பட்டதாகவும் , இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், திருமணம் வேண்டாம் என சொல்லியும் வற்புறுத்தி இந்தளவுக்கு வந்ததாகவும் கூறினார்.

அக்காவுடன் நிச்சயம் செய்யப்பப்டட பிறகு, புதுல் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இதையடுத்து தனது தங்கையே மணமகனை கட்டிக் கொள்ளட்டும் என அக்கா கூறியதால், பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமகன் மணமுடித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

16 minutes ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

56 minutes ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

1 hour ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

3 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

4 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

19 hours ago

This website uses cookies.