கேரளா ; கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர் ‘மழை குட்டி வா வா’ என மகிழ்ச்சி பொங்க நடனமாடிய போது, சிறுகணத்தில் மீண்டும் மழை வந்ததால் அந்த சிறுமி மகிழ்ச்சி அடைந்த காட்சி வைரலாகி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது, மிதமாகவும், கனமாகவும் மாறி மாறி மழை பெய்கிறது. இந்நிலையில், தன் வீட்டு மாடியில் மழை பெய்து கொண்டிருந்தபோது, நனைந்தபடி சிறுமி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மழை நின்றதால் சிறுமி ஏமாற்றம் அடைந்தாள். பின்னர், மீண்டும் மழை வராதா..? என்ற ஏக்கத்தோடு, ‘மழை குட்டி வா வா’ என மழையை மீண்டும் எதிர்பார்த்து ஆடிக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி ஆடியதாலோ, என்னவோ, திடீரென மழை மீண்டும் பெய்ய துவங்கியது. அதனால், மகிழ்ச்சி பொங்க சிறுமி சாகசத்தோடு ஆடினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
பொதுவாக, மழை பெய்யும் போது அதில் நனைந்து ஆட்டம் போடுவதை பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஆட்டம் போட்டே சிறுமி மழையை வரவழைத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.