ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். சிக்னலை மாற்றி போட்டதே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொத்து கொத்தாக மக்களின் உயிரை பறித்த இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்த அதிர்ச்சி மறைவதற்குள், அங்குள்ள பர்கார் மாவட்டத்தில் தனியார் சரக்கு ரயில் ஒன்று நேற்று தடம்புரண்டது. இதனால், பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது.
இந்த நிலையில், ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த ரயில் விபத்துகளினால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயணிகளுக்கு, ரயிலில் புகை வெளியேறிய சம்பவம் மேலும் பீதியை ஏற்படையச் செய்துள்ளது.
இதனால், புகை வெளியான பெட்டியில் தொடர்ந்து பயணிக்க பயணிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனை சீர்செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.