ரசிகர் மீது இத்தனை கொலைவெறியா? ஆணுறுப்பை சிதைத்து கொடூரமாக கொன்ற நடிகர் : திடுக்கிடும் தகவல்!

கர்நாடகாவில் ரசிகரையே பிரபல நடிகர் ஆட்களை வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இதில் தெரியப்படாத பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனுடைய தீவிர ரசிகராக இருந்தார்.

இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது, ரோணுகா சாமி, சித்ரதுர்காவில் உள்ள வெங்கடேஸ்வரா லே அவுட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போதுதான் திருமணாமாகி மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மருந்துக்கடையில் வேலை பார்த்து வரும் ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். தர்ஷனும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி, இதற்கு காரணம் அவருடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை பவித்ரா கவுடாதான் என உறுதி செய்தார்.

பின்னர் பவித்ரா கவுடா குறித்து ஆபாசமான வார்த்தையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தல் வைலரான இந்த பதிவுகளை பார்த்த பவித்ராஇ ரேணுகாசாமி யார் என தர்ஷன் ரசிகர்கள் மன்ற தலைவர் ராககேந்திராவை தொட்பு கொண்டு கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளார்.

கடந்த ஜூன் 8ஆம் தேதி ரேணுகா சாமியை கண்டுபிடித்து, தர்ஷனை சந்திக்கலாம் என பெங்களூரு அழைத்து வந்துள்ளனர். தர்ஷனின் நெருங்கிய நண்பர் வினய் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ரேணுகாசாமியை அடைத்து வைத்து சிதரவதை செய்துள்ளனர்.

அன்றைய நாள் இரவு 7 மணிக்கு தர்ஷன் அங்கு வந்திருந்ததும், காலை 3மணியளவில் வெளியே சென்றதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ரேணுகாசாமியை செருப்பால் அடித்தும், தர்ஷன் தனது பெல்ட்டை கழற்றி கொடூரமாக தாக்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் ரேணுகாசாமியின் ஆணுறுப்பில் உள்ள விறைப்பையின் தோளை மட்டும் உரித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளுது. இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிவர காரணமாக இருந்தது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த பவன் என்பவர் மூலமாகத்தான்.

அதாவது இவர்கள் ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் ரேணுகாசாமி இறந்து போனதை பார்த்த பவன், தர்ஷனுக்கு தகவல் கொடுத்து, இதை மறைக்க 30 லட்சம் வாங்கியுள்ளார்.

பின்னர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கொலை நடந்ததாக பொய்யான புகாரை கொடுக்க, முதலில் இந்த கொலை வழக்கில் கார்த்திக் என்பவர் சரணடைய முன்வந்துள்ளார். அவருக்கு ₹5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில்தான் தர்ஷன், பவித்ரா என ஒட்டுமொத்தமாக அவரது கும்பலும் சிக்கியுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.