மாமியார் மடியில் மயங்கி கிடந்த மருமகன்.. ஆடிப்போன கணவன் : நொடியில் நடந்த விபத்து.. காட்டிக் கொடுத்த பிரேத பரிசோதனை!
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ராம்துர்கா தாலுகாவில் உள்ள தன்னாலா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஃபாக்கீரப்பா. இவருடைய மருமகன் நீலப்ப ரோகண்ணாவர் 28 வயதாகிறது.
சம்பவம் நடந்த அன்று, கட்டகோலா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார் ஃபாக்கரப்பா பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். பைக்கில் சென்றபோது, மருமகனுக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அதில், மருமகன் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தாக கூறினார்.
இதையடுத்து போலீசாரும், புகார் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன், விபத்து தொடர்பான விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த நீலப்ப ரோகண்ணாவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனையில் வந்த முடிவுதான் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், நீலப்ப ரோகண்ணாவர் விபத்தில் இறக்கவில்லை என்றும், மாறாக, அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் எலும்புகள் முறிந்து இறந்ததாகவும் தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் பல திடுக்கிடும் தகவல் வெளியானத.
விசாரணையில் மருமகன் நீலப்ப ரோகண்ணாவருக்கும், தன்னுடைய மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக ஃபாக்கீரப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.
மாமியார் என்றுகூட பார்க்காமல், தன்னுடைய மனைவியிடம் நெருங்கி பழகுகிறாரே என்று மனதுக்குள் ஆத்திரப்பட. நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்தது.
உண்மையிலேயே மனைவிக்கும், மருமகனுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நம்பிய ஃபாக்கீரப்பா, ஒரு கட்டத்தில் மருமகனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதற்காகவே, சம்பவத்தன்று மருமகனை பைக்கில் அழைத்து சென்ற மாமனார், யாருமில்லாத இடத்தில் வைத்து, மருமகனின் கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார் ஃபாக்கீரப்பா.
அதற்கு பிறகுதான், விபத்தில் மருமகன் இறந்துவிட்டதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது தெரியவந்தது. இபபோது, ஃபாக்கீரப்பாவை கட்டகோலா போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.