தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபருக்கு சாலையில் வைத்து மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு தென் கொரியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் மையோசி இன் என்பவர் மும்பை புறநகர் பகுதியான ‘கர்’ என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் பைக்குடன் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர், திடீரென மையோசி இன், கையை பிடித்து இழுத்து சென்றார்.
இதனால், அதிர்ந்து போன அவர், ‘நோ நோ’ எனக் கூறியவாறு அந்த நபரிடம் இருந்து விலகிச் சென்றார். ஆனால், விடாது துரத்திய அந்த இளைஞர், மையோசி இன்-ஐ மீண்டும் நெருங்கி வந்த அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய மையோசி இன்-ஐ, இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி இன் மெதுவாக அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி நடந்து சென்றார். இது அனைத்தும் அவரது சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகியது.
இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தாமாக முன்வந்து, “பாலியல் துன்புறுத்தல்” பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.