திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்ற படி உற்சவத்தில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்படி உற்சவம் என்ற பெயரில் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பூஜைகள் நடத்தி பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருப்படி உற்சவம் திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்றது. தேவஸ்தான தாசாகித்திய திட்டம் ஏற்பாட்டில் நடைபெற்ற திருப்படி உற்சவ நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென் மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் திருமலை வரை இருக்கும் 3550 படிக்கட்டுகளுக்கு சந்தனம் இட்டு, குங்குமம் வைத்து_கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி மலையேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.