தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை உடனே நிறுத்துங்க.. உண்மை முகத்தை காட்டுங்க : பசுவராஜ் பொம்மை கொதிப்பு!

தமிழகத்திற்கு காவிரி நீரில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்துங்க.. உண்மை முகத்தை காட்டுங்க : பசுவராஜ் பொம்மை கொதிப்பு!

கடந்த 11-ஆம் தேதி டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அதன்பின், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டாலும், மிக குறைவான அளவிலேயே திறந்து விடுவதாக கூறப்பட்டது. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டும். காவிரி நீர் திறப்பதை உடனடியாக நிறுத்தி, கர்நாடகாவின் உண்மை முகத்தை தெரிவிக்க வேண்டும்.

கர்நாடக மாநில விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், காவிரி நீர் மேலாண்மையில் கர்நாடகாவில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.