பொதுத்தேர்வு எழுத வந்த 12ஆம் வகுப்பு மாணவன்… தேர்வு மையத்தில் அமர்ந்திருந்த போது காத்திருந்த அதிர்ச்சி : பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 4:48 pm
+2 Student Heart Attack - Updatenews360
Quick Share

பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் மூச்சுத்திணறி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த 18 வயது மாணவன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (18). தற்போது ஆந்திர மாநிலத்தில் இன்டர் இரண்டாம் வருட (+2) மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுத கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்திற்கு இன்று காலை வந்தார்.

அங்கு காவலர்கள் மாணவர்களை சோதனை செய்து தேர்வு மையத்தில் அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் சோதனை மேற்கொண்ட காவலரிடம் மூச்சு அடைப்பதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் காவலர்கள் சதீசை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில் திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

18 வயது மாணவன் தேர்வு எழுத வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 920

0

0