ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிஷ்ணு சரண் சேத்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவராக அறியப்படுபவர் பிஷ்ணு சரண் சேத்தி. உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு (வயது 61).
2000-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் ஒடிசா சட்டசபை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2019-ம் ஆண்டு பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவராக செயல்பட்டதுடன், பா.ஜ.க.வின் ஒடிசா துணை தலைவர் பதவியையும் வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், உடல்நல குறைவால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளால் 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்து கொண்டார். ஒடிசா கவர்னரான பேராசிரியர் கணேஷி லால், சேத்தியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.