விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.
மூன்று ஏர்கண்டிஷன் ரயில் பெட்டிகள் தீ பற்றி எரிந்து கருகின.
குர்பாவில் இருந்து இன்று காலை விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பதினோராவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அந்த ரயில் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலாக திருப்பதிக்கு செல்ல இருந்த நிலையில் அதில் ஏறி பயணிப்பதற்காக பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது திடீரென்று ரயிலின் எம்1, பி6, பி 7 ஆகிய பெட்டிகள் திடீரென்று தீ பற்றி எரிய துவங்கின.
ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ பெரும் தீவிபத்தாக மாறி பயங்கரமாக எரிய துவங்கிய நிலையில் அவற்றிலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதனால் அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று பெட்டிகளில் ஏற்பட்ட தீ மற்ற பெட்டிகளுக்கு பரவ வாய்ப்புகள் உள்ள காரணத்தால் மற்ற பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.