சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பால்தாக்கரேவின் பேரன் நிகர் தாக்கரே ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” ஏக்நாத் ஷிண்டே எனது தாத்தாவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறார். எனவே நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தேவைப்பட்டால் நான் இடைத்தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இருப்பேன். ” என்றார்.
நிகர் தாக்கரே பால் தாக்கரேவின் மூத்த மகன் பிந்துமாதவின் மகன் ஆவார். பிந்து மாதவ் 1996-ம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
இதேபோல பால் தாக்கரேவின் மற்றொரு மகன் ஜெய்தேவ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஸ்மிதா ஆகியோரும் ஏக்நாத்ஷிண்டேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.