சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பால்தாக்கரேவின் பேரன் நிகர் தாக்கரே ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” ஏக்நாத் ஷிண்டே எனது தாத்தாவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறார். எனவே நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தேவைப்பட்டால் நான் இடைத்தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இருப்பேன். ” என்றார்.
நிகர் தாக்கரே பால் தாக்கரேவின் மூத்த மகன் பிந்துமாதவின் மகன் ஆவார். பிந்து மாதவ் 1996-ம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
இதேபோல பால் தாக்கரேவின் மற்றொரு மகன் ஜெய்தேவ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஸ்மிதா ஆகியோரும் ஏக்நாத்ஷிண்டேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.