மனைவி நடத்தையில் சந்தேகம்… 9 வயது மகன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஒன்பது வயது மகன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வடமாலாபேட்டா மண்டலம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஐஸ்வர்யா.

அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ள நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த ரமேஷ் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறு ஈடுபட்டு வந்தார்.

எனவே மனைவியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்த ரமேஷ் தங்களுடைய மகன் மகேஷை கொலை செய்து மனைவியை பழிவாங்க முடிவு செய்தார்.

இந்நிலையில் நேற்று தங்களுடைய 9 வயது மகன் மகேஷிற்கு பூச்சி மருந்தை கட்டாயப்படுத்தி பலவந்தமாக குடிக்க கொடுத்தார். .இதனை கண்ட அவரது தாய் உடனடியாக அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மகேசிற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஆவேசம் அடைந்த ரமேஷ் மகன் மகேசிடம் தாய் எங்கே என கேட்டு வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து அவன் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரமேஷை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாக பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.