வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள ஜி டி மெட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற பெயரிலான கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று அந்த வங்கி வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது.
மதியத்திற்கு மேல் வங்கியில் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வங்கிக்குள் நேற்று மதியத்திற்கு மேல் புகுந்த நபர் ஒருவர் சினிமாவில் காண்பிக்கப்படுவது போன்ற போலி வெடிகுண்டு ஒன்றை காண்பித்து எனக்கு உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவை. கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பெயர் சிவாஜி என்பதும் ஜீடிமெட்டிலா பகுதியை சேர்ந்த அவர் பல்வேறு நிறுவனங்களில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து தற்போது பார்வை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
எனவே சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்து வாங்கியில் புகுந்து மிரட்டியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் அவரை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.