ஆந்திரா : வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் குடும்பத்தாரிடம் கதறிய வீடியோ வெளியகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் ஏர்ராவாரி பாளையம் வட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை குவைத் நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் சென்ற முகவர்கள் (agent) பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கண்ணீருடன் செல்போனில் செல்பி வீடியோ வெளியிட்டு குடும்பத்தாரிடம் காப்பாற்றக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏர்ராவாரி பாளையம் வட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவாணி. திருமணமான இவர் கடந்த மாதம் 21 தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்ற முகவர் செங்கல்ராஜா மற்றும் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த பாபாஜி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வருவதாகவும் அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் கண்ணீருடன் செல்போனில் செல்பி வீடியோ வெளியிட்டு குடும்பத்தாரிடம் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனைவியின் செல்பி வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் மாமியார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஸ்ரவாணி மீட்டு தரக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.