திருப்பதி : காளஹஸ்தி அருகே தமிழ்நாடு அரசு பேருந்து, லாரி ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதில் டிரைவர்கள், கண்டக்டர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தது.
திருப்பதி காளஹஸ்தி இடையே உள்ள மெர்லபாக்கத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் முன் பகுதிகளும் கடுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ், கண்டக்டர் சுரேஷ், காட்பாடியை சேர்ந்த லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து பற்றி தகவல் அறிந்த ஏற்பேடு போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.