திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : அடிவாரத்தில் திடீர் தர்ணாவால் பரபரப்பு!!

திருப்பதி: வேலூரில் இருந்து திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்த சுமார் 300க்கும் மேற்பட்டபக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500 பேர் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்வது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானத்தால் வழங்கப்படுகிறது. குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் குழுவில் சுமார் 150 பேருக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைத்த நிலையில் மற்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனாலும் தாங்கள் திட்டமிட்டபடி குடியாத்தத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட 500 பக்தர்களும் இன்று காலை திருப்பதி மலையடிவாரத்தை அடைந்தனர.

ஆனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தரிசன டிக்கெட்டுகளை உடன் கொண்டு வந்திருக்கும் பக்தர்கள் மட்டுமே திருப்பதிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி 350 பக்தர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.

நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக மாலை போட்டு விரதம் இருந்து பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வந்திருக்கிறோம். எனவே எப்படியாவது எங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் நிபந்தனைகளை காரணமாக டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தற்போது டிக்கெட் கொண்டுவந்திருக்கும் மக்கள் மட்டும் திருப்பதி மலை செல்லலாம் மற்றவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பி வைப்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

எனவே டிக்கெட் கொண்டு வந்திருந்த பக்தர்கள் திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில் மற்ற 350 பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

18 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

18 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

19 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

19 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

20 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

20 hours ago

This website uses cookies.