தெலங்கானாவில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது, நிகழ்ந்த சாலை விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நந்திப்பாடு கிராமத்தை சேர்ந்த ஆறு பேர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று சாமி கும்பிட்ட பின் காரில் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த கார் இன்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாளகுடா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கார் மீது வேகமாக மோதி கார் நசுங்கியது.
விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உடல் நசுங்கி காருக்குள்ளே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவரை மீட்டு நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணமடைந்த ஐந்து பேரின் உடல்களும் நலகொண்டா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.