தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகனத்தில் இருந்து அமைச்சர் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 10ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15ம் தேதி இறுதி நாளாகும்.
மொத்தம் 3 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாவர். அதில், 17 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமாராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் திறந்த வெளியில் பிரச்சாரம் செய்யச் சென்ற போது, வேன் ஓட்டுநர் திடீரென பிரேக்கை பிடித்துள்ளார். அப்போது, வாகனத்தின் மேலே அமைச்சர் கேடிஆர் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் பாரம் தாளாமல் கம்பி முறிந்து, அனைவரும் கீழே விழுந்தனர். இதில், அமைச்சர் கேடிஆர் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.