ஐதராபாத் கட்ச்பவுலியில் உள்ள கான்டினென்டால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகரான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று ஹைதராபாத் கட்ச்பவுலியில் உள்ள கான்டினென்டல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொடர்பான உடல் உபாதைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மழைக்காலம் துவங்கி இருப்பதால் அவருக்கு மூச்சு விடுவதில் இன்று அதிகாலையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே குடும்ப உறுப்பினர்கள் அவரை கட்ச்பவுலியில் உள்ள கான்ட்டினென்டல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணா, நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.