கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோனனகுண்டே அருகே 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து வீடுகளில் உள்ள தோழிகளுடன் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 2 ஆம் தேதி அன்றும் இளம்பெண் வழக்கம்போல் அதிகாலையில் பக்கத்து வீட்டு தோழிகளுடன் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் வாயை பொத்தி கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தகாத செயலில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார்.
இதையடுத்து அந்த பெண் கத்திக்கொண்டே கூச்சலிட்டப்படி பிடியில் இருந்து நழுவி சிறிது தூரம் ஓடினார். எனினும் விடாமல் துரத்திய அந்த நபர் மீண்டும் பெண்ணை பிடித்து வாயை பொத்தினார்.
ஆனால் அந்த பெண் பிடியில் இருந்து நழுவினார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பெண் கத்துகின்ற சத்தத்தை கேட்டு நாய்களும் குரைத்தன.
இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரான வீடியோ காட்சியை பார்த்த பெங்களூர் தெற்கு டிஜிபி லோகேஷ், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இதில் அந்த நபர் பெயர் சுரேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. டேக்சி டிரைவர் என்பதும், பல்வேறு நிறுவன பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் கேப் டிரைவராக பணியாற்றியதும் தெரியவந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.