கண்ணை மறைத்த காமம்.. ஓடும் ரயிலில் இருந்து 3 வயது குழந்தையை வீசிய கொடூரத் தாய் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

3 வயது பெண் குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாயின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதி அருகே உள்ள ரயில்வே டிராக்கில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் அம்பலமானது. உயிரிழந்த குழந்தையின் தாயார் சுனிதா தான் இந்த கொடூரமான கொலையை செய்துள்ளார்.

சுனிதாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவருக்கும் சன்னி மால்டா என்ற நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சுனிதா கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து சன்னியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் தான் தனது குழந்தைகளை கொலை செய்ய சுனிதா காதலனுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி, தன்னுடைய 3 வயது குழந்தை கிரணை வீட்டில் வைத்து கழுத்தை நெறித்து சுனிதாவும் சன்னியும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை அப்புறப்படுத்தும் நோக்கில், குழந்தையின் சடலத்தை துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு ஸ்ரீகங்காநகர் ரயில் நிலையத்திற்கு வந்து டெல்லி நோக்கி செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர்.

சிறிது தூரம் ரயில் தாண்டியதும் அப்பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண் என்ற கால்வாய் வந்துள்ளது. அதில் குழந்தையை தூக்கி வீசிவிடலாம் என்று திட்டமிட்டு வீசும் போது, சடலம் தவறி ரயில்வே பாதையிலேயே விழுந்து விட்டது.

இதனால் ஜோடி இருவரும் கையும் களவுமாக காவல்துறையில் சிக்கிக்கொண்டனர். காவல்துறை விசாரணையில் சுனிதா மற்றும் சன்னி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.