அடுத்தடுத்து திருப்பங்களை ஏற்படுத்திய பாஜக பெண் பிரமுகர் மரணம் : தேவைப்பட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!!

நடிகை சோனாலி மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 42). இவர் டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மேலும், வெப் தொடரிலும் சோனாலி நடத்துள்ளார்.
இவர் 2019-ம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோனாலி டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதனிடையே, கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகத் கடந்த 22-ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஓட்டலில் இரவு மது விருந்தில் பங்கேற்ற சோனாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான் மற்றொரு உதவியாளர் சுக்விந்தர் சிங் மற்றும் சோனாலி தங்கி இருந்த ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், உடற்கூராய்வில் சோனாலிக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து போதைப்பொருள் விநியோகம் செய்த தட்டாபிரசாத் காவ்ங்கர் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

சோனாலி மரண வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சோனாலியின் மரணம் தொடர்பான மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால் சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து திருப்பங்களை சந்தித்து வரும் சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

17 minutes ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 hour ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

3 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

3 hours ago

This website uses cookies.