ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஸ்ரீநிவாஸ். அதே பகுதியில் போக்குவரத்து காவலராக ஆக பணிபுரிபவர் குமார்.
இந்நிலையில் இன்று அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீநிவாஸ் இடம் காரை நிறுத்த சொல்லி குமார் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று தொலைவு சென்று காரை நிறுத்தியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.
இதனால் ஸ்ரீநிவாஸ் மது அருந்தி இருக்கலாம் என சந்தேகமடைந்த குமார் அவரிடம் சோதனை மேற்கொண்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரைத் தாக்கத் தொடங்கினார். இதில் போக்குவரத்து காவலர் குமார் காயமடைந்தார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீநிவாசை பிடித்த குமார் காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கார் ஓட்டுனர் போக்குவரத்து காவலரே தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.