தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்ட புவனேஸ்வர் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணிக்கு மிரியாலகுடா நிலையத்தை அடைந்தது. அப்போது ரயிலின் வேகம் குறைந்தது.
அதே நேரத்தில் எஸ்-2 பெட்டியில் பயணித்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கழிவறையில் இருந்து இருக்கைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரயில் கதவு அருகே போதையில் நின்று கொண்டிருந்த இருந்த ஒடிசாவை சேர்ந்த பிஸ்வாஸ் அந்தப் பள்ளி ஆசிரியையின் இடுப்பை கட்டிப்பிடிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை அவனிடமிருந்து தப்ப முயன்ற நிலையில் இரண்டு பேரும் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் விழுந்து காயம் அடைந்தனர்.
இருவரும் காயங்களுடன் தண்டவாளம் அருகே கிடந்த போது தாண்டவாளம் அருகே நடந்து சென்ற அப்பகுதி மக்கள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற ரயில்வே போலிசார் அந்த ஆசிரியயை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ரயில் தண்டவாளத்தில் போதையில் கிடந்த பிஸ்வாஸ் மற்றொரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த பள்ளி ஆசிரியை அளித்த் புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில் அந்தப் பெண் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிவதும். உறவினர் வீட்டுக்கு சென்று தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த போது சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.