ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா தங்கள் ஊரில் இருந்து மேலும் 4 பேருடன் பெங்களூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை மல்லனூர் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த யானை ஒன்று அவர்களை விரட்டி சென்றது.
அப்போது உஷா கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.
யானை தாக்கி பெண் மரணமடைந்தது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
யானைத் தாக்கி உஷா மரணம் அடைந்த சட்ட நேரத்தில் அதே பகுதியில் உள்ள சப்பனிகுண்டா கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் யானை தாக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.
ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பேரையும் ஒரே நாளில் யானை தாக்கி மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
This website uses cookies.