வீட்டுக்கே வந்த அமலாக்கத்துறை.. அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஹினு விமான நிலையத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியே போலீஸ் தடுப்புகளுடன், சிஆர்பிஎஃப் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முதல்வர் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஞ்சி மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் குமார் சின்ஹா கூறுகையில், “மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையின் விசாரணை முடியும் வரை, முதல்வர் இல்லம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக” தெரிவித்தார்.
ஜனவரி 13 ஆம் தேதி, அமலாக்க இயக்குனரகம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 8 வது சம்மன் அனுப்பியது. ஜனவரி 16 முதல் ஜனவரி 20-க்குள் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து அமலாக்க சம்மனுக்கு பதிலளித்த முதல்வர் ஜனவரி 20-ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நிலமோசடிவழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முதல்வர் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துரையை கண்டித்து முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடந்து வரும் நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.