14 வயது மகளை கொலை செய்த தந்தை… எல்லை மீறியதால் நடந்த கொடூரம் : கேரளாவில் பயங்கரம்!!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா கருமால்லூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஹாபிஸ். இவரது 14 வயதான மகள் அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இவர் அதே பள்ளியில் படிக்கும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பிளஸ் 1 மாணவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் முகம்மது ஹாபிசுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் தன்னுடைய மகளை கண்டித்தார். ஆனால் அதன் பிறகும் அந்த மாணவி காதலை கைவிடவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மகளின் பேக்கில் ஒரு செல்போன் இருந்ததை ஹாபிஸ் கண்டுபிடித்தார்.
அந்த போனிலிருந்து மாணவி, காதலனை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ஹாபிஸ், மகளை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கினார். இதன்பின் பலவந்தமாக வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார். அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயக்கமடைந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த மாணவியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த டாக்டர்கள் உடனடியாக ஆலுவா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடத்திய விசாரணையில், அந்த மாணவியை முகமது ஹாபிஸ் தாக்கி கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முகமது ஹாபிஸ் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த ஆணவக் கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.