பிரபல நடிகர் வீட்டிருக்கு பெண்ணுக்கு மானபங்கம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில், பிரபல இந்தி திரையுலக நடிகர் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா அமைந்து உள்ளது.
அந்த வழியே ஆட்டோ ரிக்சா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து உள்ளார். அந்த ஆட்டோ, சாலை சந்திப்பு அருகே இரவு 10 மணியளவில் சென்று உள்ளது.
அப்போது, ஒருவர் ஆட்டோவில் ஏறுவதுபோல் அதனை அணுகி உள்ளார். இதன்பின்னர், ஆட்டோவில் இருந்த பெண்ணை நெருங்கி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவிட்டு, தப்பி சென்று உள்ளார்.
இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்படி, அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமிராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அரவிந்த் அஜய் வகேலா (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்து உள்ளனர்.
அதில், அந்நபர் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளியான அஜய் வகேலாவை கைது செய்தனர்.
அவர், ஜுகு பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே சாலையில் பொருட்களை வைத்து, அவற்றை விற்பனை செய்து வந்து உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.