நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு..! இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி பலி..!

Author: Vignesh
17 December 2022, 9:39 am
fire accident-updatenews360
Quick Share

தெலுங்கானா: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் கருகி இறந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மஞ்ரியலா மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா பத்மபதியா தம்பதியினர் வசித்து வந்தனர் . அவர்களது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் இரண்டு பேர் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

fire accident-updatenews360

ஆறு பேரும் நேற்று இரவு சாப்பிட்ட பின் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு தாண்டிய பின் அந்த வீடு திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.

இதனை கவனித்த அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறு பேரும் உடல்கள் கருகி மரணம் அடைந்தனர்.

fire accident-updatenews360

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த மஞ்சிரியாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். ஆறு பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது கதவை தாழிட்டு வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீ விபத்தில் மரணமடைந்தவர்கள் விவரம்:

சிவையா (50),பத்மா (45), மௌனிகா (35), ஹீம பிந்து (2), ஸ்வீட்டி (4), சந்தையா (40).

fire accident-updatenews360
Views: - 329

0

0