நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கலர் புகை ஸ்பிரே வீசிய விவகாரம் : முக்கிய குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்!
டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென்று லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர்.
அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகை குண்டுகளை வீசினர்.அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் இதேபோல் கலர் புகை குண்டுகளை வைத்து பீதியை ஏற்படுத்தினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35), ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரிடமும் டெல்லி தனிப்படை போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரித்தனர்.
இதையடுத்து 4 பேரும் நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவத்துக்கு சூத்திரதாரியாக கருதப்படும் லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். பீகாரை சேர்ந்த இவர் கொல்கத்தாவில் ஆசிரியராக இருக்கிறார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று லலித் ஜா டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி போலீஸ் காவலில் எடுக்க மனு செய்தனர். இதையடுத்து லலித் ஜாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.