ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாத்தப்பட்டினத்தில் அரசு குருகுல உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் விடுதியில் ஜன்னல் வழியாக ராஜ நாகம் ஒன்று மாணவர்கள் அறைக்குள் வந்தது. திடிரென சுமார் 12 உயரமுள்ள ராஜநாகம் மாணவர்கள் பைகளின் மீது நின்று படமெடுத்து ஆடியதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடி விடுதி காப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வந்த பாம்பு பிடிப்பவர் அதனை பிளாஸ்டிக் குழாய் மூலம் பையில் அடைத்து வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் மாணவர்கள் மத்தியில் பாம்பு வந்து சென்ற அச்சம் போகாததால் அறைக்கு செல்வதை மறுத்து விட்டனர்.
பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விடுதி சுற்றி உள்ள பகுதியில் சுத்தமாகவும் செடிகள் வளராமல் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.