ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளைஞர் தௌசிப் 100 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்து அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட முயற்சி செய்துள்ளார்.
இதற்காக கடந்த திங்கள்கிழமை மாலை சுமார் 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்துள்ளார். அதனை அக்கம் பக்கத்தில் இருந்த அவருடைய நண்பர்களும் வீடியோ எடுத்தனர்.
அப்போது, தண்ணீரில் விழுந்து அவர் நீந்தத் தொடங்கியவுடன், மெதுவாக நீரில் மூழ்கினார். இதையடுத்து மூச்சி திணறி தௌசிப் உயிரிழந்தார்.
இதனை பார்த்த அதிர்ச்சியான அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை, உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: போலீஸ் விசாரணையின் போது தாக்குதல்? தொழிலாளி மரணத்தில் திருப்பம்.. உடலை தோண்டி எடுக்க உத்தரவு!
பின் அவருடைய சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் குமார் குஷ்வாஹா கூறுகையில், பல அடி ஆழமான தண்ணீரில் குதித்த அந்த இளைஞன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
COURTESY : News11 Bharat
ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.