டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம்.
அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது.
இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர். எனவே அவர்கள் அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அறை முழுவதும் பரவி, மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கும் என உறுதிசெய்துள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.