மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி எனப்படும் குறிப்பிட்ட பிரிவினரை குக்கி இன மக்களின் பழங்குடியினர் இன பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவான கலவரம் ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் நீடித்து கொண்டு இறுகிறது.
கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பலர் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 92 பேர் இந்த கலவரத்தில் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் இன்னும் கலவரம் ஓயவில்லை. இந்நிலையில், இந்த கலவரத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கலவரத்தில் காயமடைந்த 8 வயது சிறுவனை அவரது தாய் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஐரோசெம்பா பகுதியில் நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற வைத்து பின்னர் தாய் – மகனை ஆம்புலன்சிற்குள் வைத்து தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.