4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. விசாரணையில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. கொலை வழக்கில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசனா சேத் (39) என்பவர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டது. கணவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். தற்போது 4 வயது குழந்தையுடன் சுசனா சேத் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 6ம் தேதி கோவா சென்றிருந்தார்.

அப்போது, தனது 4 வயது குழந்தைக்கு இருமல் மருந்துகளை கொடுத்து கொலை செய்ய முயன்றதுடன், தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை சூட்கேஸில் வைத்து காரில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து, அவரை பாதி வழியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவரிடம் மனநலப் பரிசோதனையை செய்த போலீசார், நேற்று மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக கோவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, முகத்தை கருப்பு துணியால் மூடியபடி வந்த அவர், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தற்கொலைக்கு முயன்ற போது அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரது கைப்பையை போலீசார் சோதனை செய்ததில், அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதாவது, டிஸ்யூ பேப்பரில், தனது குழந்தையை பார்க்க கணவனுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று குறிப்பிடிப்பட்டிருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடக்கும் போது இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட் ரமணன் பெங்களூருக்கு விரைந்தார்.

அவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் வெங்கட் ரமணன் இன்று விசாரணைக்கு செல்லும் போது அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குவிந்து இருந்தனர். எனினும், செய்தியாளர்களிடம் பேச மறுத்த வெங்கட் ரமணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்” கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

27 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

28 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

47 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.