சொத்தை எழுதித் தர மறுத்த தாய்.. துடிதுடிக்க கொலை செய்த கொடூர மகன் : சிக்கிய 2 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடாகவில் தார்வார் நகர் ஒசஎல்லாப்புரா பகுதியை சேர்ந்த சாரதா பஜந்திரி என்பவருக்கு ராஜேந்திரா என்ற மகன் உள்ளார். சாரதாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்தார்.
இதனால் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், சாரதாவுக்கு விதவை உதவித்தொகை பணமும் வந்தது. மேலும் சில சொத்துக்களும் இருந்தது.
வேலைக்கு எங்கும் செல்லாத ராஜேந்திரா, தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பணத்தை பிடுங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.மேலும் சொத்தை எழுதித் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனக்கு சொத்தை எழுதித் தர தாய் மறுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயை கண்மூடித்தனமாமக தாக்கினார்.
இதனால் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் தாய் உயிரிழந்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேந்திரா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 2 பேர் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.