பரவி வரும் புதிய வகை கொரோனா… தடுப்பூசி தேவையா? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!

பரவி வரும் புதிய வகை கொரோனா… தடுப்பூசி தேவையா? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!

உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் “JN.1 கொரோனாவிற்கு தடுப்பூசி தேவை இல்லை எனவும்,பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

ஓமிக்ரானின் இந்த புதிய துணை மாறுபாட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் நிம்மதியான விஷயம். JN.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும்.

இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கைபடி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 656 பேர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிக்சை பெறறு வருபவர்களின் எண்ணிக்கையை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 5,33,333 ஆக உள்ளது என தெரிவித்தனர்.

முதன்முதலாக இந்தியாவில் கொரோனா பரவிய போது தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி தடுப்பூசி 2 தவணையாக போடப்பட்டது. அதன்படி முதல் தவணையில் 95% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அடுத்து இரண்டாம் தவணையாக 88 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின்னர் 3-வது அலையில் பரவிய கொரோனா காரணமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த போஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோர். முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின்னர் இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

4 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

5 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

6 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

7 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

7 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

8 hours ago

This website uses cookies.