எம்பிக்களின் எண்ணிக்கை உயரப்போகிறது… சரியான இடத்தில் செங்கோல் உள்ளது : பிரதமர் மோடி சூசகம்!!

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வருகிறது. அதன்படி, புதிய நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வி.டி.சாவர்க்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின் நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஒன்றாக நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி தனது முதல் சிறப்புரையை ஆற்றினார். அவற்றை கீழே காணலாம்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது. அத்தகைய நாள் மே 28 ஆம் தேதி ஆகும். தற்பொழுது, புதிய பாதையில் புதிய பயணத்தை நாம் தற்போது தொடங்கியுள்ளோம்.

இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. எனவே, இந்த புதிய நாடாளுமன்றமும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்களித்து உலகின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் எங்கு அமர்வார்கள். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் காலத்தின் தேவையாக உள்ளது.

செங்கோல் ஆனது சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது எங்கள் அதிர்ஷ்டம்.

செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் ‘செங்கோல் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

12 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

13 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

13 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

14 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

14 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

15 hours ago

This website uses cookies.