தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி… திடீரென நுழைந்த சிபிஐ : அடுத்த நிமிடமே நடந்த மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 10:03 pm
Bribery Suicide - Updatenews360
Quick Share

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி.

இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக நேற்று தொழிலதிபரிடமிருந்து பிஷோனி 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர், இரவு முழுவதும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் உள்ள பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இரவு முழுவதும் சோதனை நீடித்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. தொடர்ந்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முற்பட்டனர்.

அப்போது, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் இருந்து பிஷோனி கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த பிஷோனி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 207

0

0