ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், விஜயவாடா,கம்மம் சூர்யா பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இரண்டு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கம்மம், சூர்யா பேட்டை ஆகிய தெலுங்கானா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போலீசார் போக்குவரத்தை வேறு பாதைகளில் திருப்பி விட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கிருஷ்ணா, குண்டூர் ஆகிய ஆந்திரா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 10 பேர் மரணம் அடைந்து விட்டனர்.
இடுபாடுகளில் சிக்கி மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மேலும் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே இரண்டு மாநிலங்களிலும் அதிகாரிகள், மீட்பு குழுவினர் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.