ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், விஜயவாடா,கம்மம் சூர்யா பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இரண்டு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கம்மம், சூர்யா பேட்டை ஆகிய தெலுங்கானா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போலீசார் போக்குவரத்தை வேறு பாதைகளில் திருப்பி விட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கிருஷ்ணா, குண்டூர் ஆகிய ஆந்திரா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 10 பேர் மரணம் அடைந்து விட்டனர்.
இடுபாடுகளில் சிக்கி மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மேலும் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே இரண்டு மாநிலங்களிலும் அதிகாரிகள், மீட்பு குழுவினர் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.