பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது. எனவே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் அவரது இல்லத்தில் நடந்தது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர்.
மேலும் படிக்க: தார்மீக வெற்றி காங்கிரஸ்க்குத்தான்.. அடக்கமாக இருக்க பாஜகவுக்கு பாடம் கொடுத்த மக்கள் : ப.சிதம்பரம் விமர்சனம்!
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.