இரண்டு முறை உயிர்பிழைத்த கல்லூரி மாணவியை விடாமல் துரத்திய பாம்பு : College Bagல் பதுங்கியிருந்த பாம்பு கடித்து பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 12:51 pm
Snake Bite Dead -Updatenews360
Quick Share

தெலுங்கானா : கல்லூரி மாணவி ஒருவரை பாம்பு இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடித்த சம்பவங்களில் 2 முறை உயிர் பிழைத்த அவர் மூன்றாவது முறையாக நேற்று மரணமடைந்தார்.

அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெட்டோட்டா கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்.
அவருடைய ஒரே மகள் பிரானலி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் வகுப்பு படித்து வருகிறார் பிரானலி.

கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் இந்த ஆண்டு ஜனவரி மாதமும் அவரை பாம்பு கடித்தது. தங்களுடைய ஒரே மகளை பாம்பு கடித்த நிலையில் சுமார் 5 லட்ச ரூபாய் செலவு செய்து அவரை பெற்றோர் உயிர் பிழைக்க வைத்தனர்.

ஆனால் இந்த முறை விதி வலியது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய கல்லூரி பைக்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.

பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார். தங்களுடைய ஒரே மகள் தொடர் பாம்பு கடி காரணமாக மரணமடைந்தது அந்த குடும்பத்தினரிடையே அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1065

0

0