ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பாக்கிய நகர் பகுதியில் வசிக்கும் ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார்.
தற்போது பிரசாத் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமித்து வைத்துள்ள குடோனில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இந்நிலையில் பிரசாத் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் சம்பளம் பணத்தை தருவதில்லை.
இதனால் பிரசாத்தின் மகன் சேஷக்குமார் பணியில் இருந்த தந்தையிடம் சென்று ஏடிஎம் கார்டு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் பொறுமை இழந்த ஏ.ஆர். கான்ஸ்டபிள் பிரசாத் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சேஷக்குமார் மார்பில் சுட்டார். உடனடியாக அருகில் இருந்த சக போலீசார் சேஷகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஏ.ஆர்.கான்ஸ்டபிள் பிரசாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சுமித் சுனில் ஆய்வு மேற்கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மதுபோதைக்கு அடிமையாகி பெற்ற மகனை பணியில் இருந்த காவலரே சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.