அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான குஷால் கிஷோர் இல்லத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாகுர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் பெயர் வினய் ஸ்ரீவத்சவா என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர் அதிகாலை 4.15 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். உடல் கண்டறியப்பட்ட இடத்தினருகே துப்பாக்கியும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கி உரிமம் அமைச்சரின் மகன் விகாஷ் கிஷோரின் பெயரில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தடயவியல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவரும் எனவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பேன் என அமைச்சர் குஷால் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞரிக் கொலைக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. சம்பவம் நடந்தபோது வீட்டில் யார் இருந்தார் என்பதும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய உயிரிழந்த நபரின் சகோதரர், அமைச்சர் குஷால் கிஷோர் இல்லத்தின் என் சகோதரர் உயிரிழந்துள்ளார். என் சகோதரர் அமைச்சர் மகனின் நண்பன்.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் 3 பேர் இருந்தனர். ஆனால் அப்போது அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. கொலை நடந்த சம்பவ இடத்தில் அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.