Categories: இந்தியா

ஒத்த ரூபாய்க்கு வழியில்லை உனக்கு CCTV வேறயா?.. திருட எதுவும் இல்லாததால் 20 ரூபாயை வைத்து சென்ற திருடன்..!

திருப்பதி: இந்த வீட்டில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் சி சி கேமரா எதற்கு. குடித்த தண்ணீருக்கு இருபது ரூபாய் வைத்து செல்கிறேன். எடுத்து கொள் என்று திருட சென்ற வீட்டில் CCTV கேமரா முன் சைகை காண்பித்து சென்ற திருடன்.

சுவாரசியம்: தெலுங்கானா மாநிலம் ரங்காராநட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்கு நேற்று இரவு முகமூடி, தலையில் தொப்பி ஆகியவற்றை அணிந்த ஒரு திருடன் திருடுவதற்காக சென்றான். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் வீடு முழுவதும் தீவிரமாக தேடி பார்த்தும் திருடனுக்கு அந்த வீட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை.

அதேபோல், பணமாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால், மன வேதனை அடைந்த அந்த திருடன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா முன் வந்து ஒரே ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில், வீட்டில் சிசிடிவி கேமரா எதற்காக பொருத்தி இருக்கிறீர்கள் என்று கேட்பது போல் சைகை காண்பித்து விட்டு சென்றான்.

பின்னர், மீண்டும் வந்த அந்த திருடன் வீட்டில் இருந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான். பின்னர், அங்கிருந்து டேபிள் மீது இருபது ரூபாயை வைத்த அந்த திருடன் குடித்த தண்ணீருக்கும் ஒரு 20 ரூபாய் வைத்து விட்டேன். உங்கள் வீட்டில் இருந்து ஒன்றுமே எடுத்துச் செல்லவில்லை என்று சி சி கேமரா முன் சைகையால் கூறி அங்கிருந்து சென்று விட்டான்.

வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்த வீட்டின் உரிமையாளர் இன்று காலை வந்து பார்த்தபோது யாரோ பூட்டை உடைத்து கதவை திறந்திருப்பது தெரிய வந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமூடி திருடன் வந்தது, வீடு முழுவதும் தேடிப் பார்த்தது, ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை குடித்த தண்ணீருக்கும் பணம் வைத்து செல்கிறேன் என்று அவன் சைகையால் கூறி சென்றது ஆகியவை தெரியவந்தது.

Poorni

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

15 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

31 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

39 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.