ஆணவத்தின் உச்சம்… காஸ்ட்லியான காரில் சாய்ந்து நின்ற ஏழைச் சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் : மனதை நொறுங்க வைக்கும் வீடியோ!!

6 வயதே ஆன அந்த பிஞ்சு சிறுவனை துளி கூட இரக்கமே இல்லாமல், ஏதோ நாயை மிதித்து தள்ளுவதை போல இளைஞர் எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள் காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரிக்கு இளைஞர் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது சிறிது நேரம் சாலையோரத்தில் அவர் தனது காரை நிறுத்தியுள்ளார்.

அந்த சமயத்தில், 6 வயதான சிறுவன் ஒருவர், கார் உரிமையாளர் உள்ளே இருப்பது தெரியாமல் அந்தக் காரின் மீது லேசாக சாய்ந்துள்ளார்.
அழுக்கான சட்டை, எண்ணெய் வைக்காத தலை, ஒல்லியான தேகம் என அவனை பார்க்கும் போதே ஒரு ஏழை வீட்டு சிறுவன் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில், தனது காரின் மீது ஏழை சிறுவன் சாய்ந்திருப்பதை பார்த்த அந்த இளைஞருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. உடனே, காரில் இருந்து வெளியே இறங்கிய அந்த இளைஞர் பின்பக்கமாக வந்து, அந்த சிறுவனின் இடுப்பில் ஓங்கி உதைத்தார்.

ஏதோ தனக்கு நிகரான வயதுடைய நபரை உதைப்பதை போல அவர் உதைக்கிறார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பிஞ்சு சிறுவன், அதிர்ச்சியில் உதை வாங்கிய இடத்தை தடவிக்கொண்டே ஒதுங்கி நிற்கிறான்.

இதையடுத்து, பெரிய சாதனையை செய்துவிட்டது போல தனது காரில் அந்த இளைஞர் ஏறினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், உடனடியாக அந்த காரை சுற்றி வளைத்தனர்.

காரில் இருந்து இறங்குமாறு அந்த இளைஞர்களை அவர்கள் கூப்பிட, அவரோ பயத்தில் காரின் உள்ளே இருந்தபடியே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு மேலும் மக்கள் கூட்டம் சேரவே அவர் காரை வேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொதுமக்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், அவர் பொன்னியாம்பலம் பகுதியைச் சேர்ந்த சிஷாத் (25) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கார் மீது சிறுவன் சாய்ந்திருந்ததை பார்த்த கார் உரிமையாளர், சிறுவனை நகர்ந்து செல்ல கூறியிருக்கலாம், அல்லது காரை ஸ்டார்ட் செய்திருந்தால் அவர் விலகியிருப்பார்.

இதை செய்யாமல் ஒரு ஏழை சிறுவன்தானே என அவர் உதைத்துள்ளார். இதே பணக்காரர் நின்றிருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.